கோவை மேயர் பதவியை கைபற்ற திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பக்காவாக ப்ளான் போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அதனைத்தொடர்ந்து, 2024இல் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியமைக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். அதற்காக கட்சி கட்டமைப்பை இப்போதிலிருந்தே வலுப்படுத்தினால்தான் சரியாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் கோவையில் திமுக மிகவும் பலவீனமாக உள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கொங்கு மண்டல கட்சி பொறுப்பு கைக்கு வந்ததும் அங்கு முகாமிட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.மேலும் உள்ளடி வேலைகளை சொந்த கட்சியினரே செய்வார்கள் என்பதால் கரூர் ஐடி விங்கை கோவையில் களம் இறக்கி உள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் இருக்கும் 100 வார்டுகளிலும் வெற்றி பெற்று கோவை மாநகராட்சி மேயர் பதவியை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்று செந்தில் பாலாஜி தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 1,290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பூத்துக்கும் தலா 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப்படுகிறது. அந்தந்த ஏரியாவை சேர்ந்தவர்களை, மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை உறுப்பினர்களாக நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத்துக்கும் பொறுப்பாளராக, கரூர் மாவட்ட நிர்வாகிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமித்திருக்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சொந்த கட்சியினரே உள்ளடி வேலை பார்த்ததால்தான் தோல்வி கிடைத்ததாகவும், அதனை கருத்தில் கொண்டு தற்போது வெற்றி மட்டுமே முக்கியம் என்ற ரீதியில் செந்தில் பாலாஜி பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி கொங்கு மண்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போதே உள்ளூர் நிர்வாகிகளிடம் அதிருப்தி நிலவியது. எனவே, அவர்கள் ஏதேனும் உள்ளடி வேலை பார்த்து, தேர்தல் தோல்விக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்து விடக் கூடாது என்பதால் கரூர் நிர்வாகிகளை செந்தில் பாலாஜி நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
- சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினர்க்கு பாராட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், […]
- மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவுதென்னிந்தியாவில் முதன்முறையாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டு உள்ளது […]
- பாஜக 99 -ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரச்சாரம்சோழவந்தானில் பாஜக 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி பிரச்சார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் […]
- மஞ்சூரில் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம்மஞ்சூர் குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம் மஞ்சூரில் நடைபெற்றதுகுந்தா […]
- நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் தொடர்பான சுற்றரிக்கையை திரும்பபெறுக சு. வெங்கடேசன் எம்.பிதென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில் […]
- பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்வாடிப்பட்டியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆலோசனையின் பேரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை […]
- ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி..!உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்கரும்பு […]
- பழனி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் ‘கூலிங் பெயிண்ட்’அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், […]
- மரக்காணம் அருகே பறவைகள் சரணாலயம்..!விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பறவைகள் வந்து செல்லும் வலசை பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் […]
- அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது- பிரியங்கா காந்திராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அதிகார வெறி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ரியல் ஹீரோ: ஓர் உளவியல் பதிவு..! உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை […]
- நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்நீலகிரி மாவட்ட அரசு தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக […]
- சோழவந்தானில் புனித ரமலான் நோன்பு தராஃபி தொழுகையில் முஸ்லிம்கள்மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராபிக் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 410விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர்.பொருள் (மு.வ): அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் […]