தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மகள் திருமணவிழாவில் கலந்து கொண்ட தென்மாவட்ட மூத்த அமைச்சர் மு.க.அழகிரியை நேரில் பார்த்த தி.மு.க அமைச்சர்கள், வி.ஜ.பி.க்கள் அனைவரும் வணக்கம் செலுத்தி நலம் விசாரித்தனர்.
சென்னை, ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும் திமுக பிரமுகர் டாக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் நடைபெற்ற திருமண விழாவில், மு.க. அழகிரி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மு.க. அழகிரியைப் பார்த்த அமைச்சர்கள், திமுக விஐபிகள் அனைவரும் மரியாதையுடன் வணக்கம் சொல்லி நலம் விசாரித்தனர். இந்த திருமணத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக விஐபிகள் பலரும் கலந்துகொண்டனர். அதுமட்டுமல்ல, தமிழச்சியின் மகள் திருமணத்தில் மு.க. அழகிரி மனைவி, மகன் மருமகள், பேரக்குழந்தைகள் என குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டார்.
தமிழச்சி தங்கபாண்டியன் சகோதர்தான் அமைச்சர் தங்கம் தென்னரசு என்பதால், மணமகளுக்கு தாய்மாமன் என்கிற முறையில் திருமண விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று நலம் விசாரித்துள்ளார். தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியன் மு.க. அழகிரிக்கு மிகவும் பிடித்தமானவர், குடும்ப நண்பர் என்பதால் அவருடைய மகள் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமணத்துக்கு, அழகிரி தனது மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வந்தார். அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மு.க. அழகிரியைப் பார்த்த திமுக அமைச்சர்கள், அருகே வந்து மரியாதையுடன் வணக்கம் சொல்லி நலம் விசாரித்தனர். அவர்கள் அனைவருக்கும் மு.க. அழகிரி பதிலுக்கு வணக்கம் கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியிடம் நீண்ட நேரம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தார்.
தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமணத்தில் மு.க. அழகிரி குடும்பத்துடன் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்திவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு அவரை கார் வரை சென்று வழி அனுப்பி வைத்தார். திமுக அமைச்சர்கள், விஐபிகள் மரியாதையுடன் வணக்கம் வைத்து மு.க.அழகிரியை நலம் விசாரித்தது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினும் கலந்துகொண்டார். ஆனால், இந்தமுறையும் சகோதரர்கள் மு.க. அழகிரியும் மு.க. ஸ்டாலினும் சந்திப்பு மட்டும் மிஸ்ஸிங்.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]