தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மகள் திருமணவிழாவில் கலந்து கொண்ட தென்மாவட்ட மூத்த அமைச்சர் மு.க.அழகிரியை நேரில் பார்த்த தி.மு.க அமைச்சர்கள், வி.ஜ.பி.க்கள் அனைவரும் வணக்கம் செலுத்தி நலம் விசாரித்தனர்.
சென்னை, ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும் திமுக பிரமுகர் டாக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் நடைபெற்ற திருமண விழாவில், மு.க. அழகிரி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மு.க. அழகிரியைப் பார்த்த அமைச்சர்கள், திமுக விஐபிகள் அனைவரும் மரியாதையுடன் வணக்கம் சொல்லி நலம் விசாரித்தனர். இந்த திருமணத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக விஐபிகள் பலரும் கலந்துகொண்டனர். அதுமட்டுமல்ல, தமிழச்சியின் மகள் திருமணத்தில் மு.க. அழகிரி மனைவி, மகன் மருமகள், பேரக்குழந்தைகள் என குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டார்.
தமிழச்சி தங்கபாண்டியன் சகோதர்தான் அமைச்சர் தங்கம் தென்னரசு என்பதால், மணமகளுக்கு தாய்மாமன் என்கிற முறையில் திருமண விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று நலம் விசாரித்துள்ளார். தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியன் மு.க. அழகிரிக்கு மிகவும் பிடித்தமானவர், குடும்ப நண்பர் என்பதால் அவருடைய மகள் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமணத்துக்கு, அழகிரி தனது மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வந்தார். அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மு.க. அழகிரியைப் பார்த்த திமுக அமைச்சர்கள், அருகே வந்து மரியாதையுடன் வணக்கம் சொல்லி நலம் விசாரித்தனர். அவர்கள் அனைவருக்கும் மு.க. அழகிரி பதிலுக்கு வணக்கம் கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியிடம் நீண்ட நேரம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தார்.
தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமணத்தில் மு.க. அழகிரி குடும்பத்துடன் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்திவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு அவரை கார் வரை சென்று வழி அனுப்பி வைத்தார். திமுக அமைச்சர்கள், விஐபிகள் மரியாதையுடன் வணக்கம் வைத்து மு.க.அழகிரியை நலம் விசாரித்தது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினும் கலந்துகொண்டார். ஆனால், இந்தமுறையும் சகோதரர்கள் மு.க. அழகிரியும் மு.க. ஸ்டாலினும் சந்திப்பு மட்டும் மிஸ்ஸிங்.
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]