• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பை தொடரலாம்- உச்ச நீதிமன்றம் அனுமதி

Byகாயத்ரி

Jul 23, 2022

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை தொடரை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அளிக்கப்படு பாதுகாப்பை எதிர்த்து, பிக் ஷாசாஹா திரிபுரா உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளது. பின் இதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி கூறியது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் திரிபுரா நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு இந்த மனுவை விசாரித்து, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கும் பாதுகாப்பை தொடர உத்தரவிட்டுள்ளது.