நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குமரி மாவட்டத்தில் இன்று அவரது பிரச்சாரத்தை அருமனையில் தொடங்கினார். அதனை தொடர்ந்து, அழகிய மண்டபம் குளச்சல் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில், கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மரியஜெனிபர், விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெமினி ஆகியோருக்கு ‘மைக்’சின்னத்தில் வாக்குகளை கேட்டார்.
குமரி தேர்தல் பிரச்சாரத்தை கன்னியாகுமரியில் நிறைவு செய்தார்.