குடிசை ஜெயபாரதி .. எண்பதுகளில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் . இன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு தீராத வயிற்று வலியாலும் இதர உடல் உபாதைகளாலும் அவதிப்படுகிறார் . அதற்கு தேவைப்படும் மருந்துகள் வாங்ககூட பணமில்லாமல் அவதிப்படுகிறார். இவருடைய நிலையை அறிந்து பாலு மகேந்திரா நூலகத்தில் இருந்து கதையாசிரியரும் வசனகர்த்தாவுமான அஜயன்பாலா
கொளத்தூரில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த போது .மனைவியுடன் தனியாக வசித்துவரும் குடிசை ஜெயபாரதியின் நிலை மிக மோசமாக இருப்பதாக தெரிவித்ததுடன் பாலுமகேந்திரா நூலகம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ள அறிக்கையில்
நண்பர்களே தமிழ் நாட்டில் 1980களில் எதார்த்த சினிமா அலை பேரெழுச்சியாக துவங்கிய போது பாரதிராஜா மகேந்திரன் பாலுமகேந்திரா ஆகியோருடன் பல இயக்குனர்கள் இந்த எதார்த்தவாத அலையில் களமிறங்கினர். அதில் குடிசை என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர்தான் இயக்குநர்ஜெயபாரதி. தமிழ் நாட்டின் முதல் கிரவுட் பண்டிங் திரைப்படம் .வெறும் 90.000 ம் ரூபாயில் எடுக்கப்பட்ட குடிசை படம் .1979 ல் வெளியாகி பரவலாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. . பிடிவாதமாக எதார்த்த சினிமா மட்டுமே எடுப்பேன் என்ற முயற்சியில் தொடந்து பயணித்தவர் .அவள் அப்படித்தான் எடுத்த இயக்குனர் ருத்ரையாவின் அடுத்த படமான கிராமத்து அத்தியாயம் படத்தில் நாயகனாக நடிக்க தேர்வு தேர்வு செய்யப்பட்டு பின் அதிலிருந்து விலகி மீண்டும் இயக்க ஆரம்பித்தார் குடிசையை தொடர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னையை மையமாக கொண்டு பாக்யராஜ் நடிக்க ஊமை ஜனங்கள், 1984ல் வெளியிட்டார் தொடர்ந்து உச்சி வெயில் 1991, நண்பா நண்பா 2002,சத்யராஜ் நடித்த குருஷேத்திரம் 2006, ஆகிய படங்களை இயக்கினார்
இதில் உச்சி வெயில் இந்தியன் பனோரமாவில் தேர்வுசெய்யப்ப்ட்டு பல திரைப்பட விழாக்களில் பங்கேற்ற திரைப்படம், அதுபோல நண்பா நண்பா அதில் நடித்த நடிகர் வாகை சந்திரசேகருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுத் தந்த திரைப்படம் 2010 ல் இவர் கடைசியாக இயக்கிய புத்திரன் திரைப்படம் வெறும் 6 லட்சத்தில் 13 நாளில் எடுக்கப்பட்ட படம் . இத்திரைபடம் அந்த ஆண்டின் சிறந்த படமாக தமிழ்நாட்டு அரசால் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஆண்டு திமுக அரசால் கவுரவிக்கப்பட்டது
எண்ணிக்கையில் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும் மாற்று சினிமா எடுப்பேன் என பிடிவாதமாக இயங்கியவர்.
மாற்று சினிமாவுக்காக கருத்தரங்கம் நடத்தும் பண்பாட்டு அக்கறை கொண்ட நம் தமிழக அரசு இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு இன்று நலிவுற்று இருக்கும் படைப்பாளிகளின் இறுதிக்கால மருத்துவ செலவுக்காக ஏதேனும் அக்கறை எடுத்துக்கொள்வது அந்தப் பாதையில் பயனிப்பவரகளுக்கு பேருதவியாக இருக்கும்
குடிசை ஜெய்பாரதிக்கு நீங்கள் செய்யும் பொருளாதார உதவி அவரை நெருக்கடியான உடல் நிலையிலிருந்து ஓரளவு காப்பாற்றக்கூடும்
அவரது மனைவி ப்ரீத்தா ஜெயராமன் அவர்களின் வங்கி முகவரி மற்றும் கூகுள் பே எண் கீழே கொடுத்திருக்கிறேன் உங்களால் முடிந்த தொகை அவருக்கு செலுத்தி உதவவும்
Preetha jayaraman
AC no 189301000001083
IFSC. IOBA0001893
Indian Overseas Bank
Gpay no : +91 97917 21963
தொலைபேசி தொடர்புகொள்ள
Jeyabaarathi : 97899 66945
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]