• Wed. Apr 24th, 2024

தப்லிக் ஜமாத் அமைப்பு மீது தடை விதித்த சவுதி அரேபியா..!

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, இஸ்லாமிய அமைப்பான தப்லிக் ஜமாத் அமைப்பை தடை செய்துள்ளது.

தப்லிக் ஜமாத் தீவிரவாதத்திற்குள் நுழைவதற்கான நுழைவாயிலைத் தவிர வேறில்லை என்று சவுதி அரேபியா கடுமையாக கூறியுள்ளது. சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சர் டாக்டர் அப்துல்லதீப் அல் ஷேக் இது குறித்து ட்வீட் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வரும் மக்களுக்கு தப்லிக் ஜமாஅத்தின் உண்மை நிலை குறித்து தெரிவிக்கவும், அவர்கள் வருவதற்கு தடை விதிக்கவும் மசூதிகளின் இமாம்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

சவதி அமைச்சர் டாக்டர் அப்துல்லதீஃப் அல்-ஷேக் தப்லிக் ஜமாத் மற்றும் தாவா குழுவை தடை செய்த தோடு, அரசின் இந்த முடிவு குறித்து அனைத்து மசூதிகளின் இமாம்களும்,தொழுகைக்கு வரும் மக்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்த இரண்டு அமைப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த இரண்டு அமைப்புகளும் கூட்டாக அல் அஹ்பாப் என்று அழைக்கப்படுகின்றன.

வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இந்த இரண்டு அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு இமாம்கள் மற்றும் மதகுருக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். தப்லிக் ஜமாஅத் மற்றும் தவாஹ் குழுவுடன் தொடர்பும் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

தப்லிக் ஜமாத் இந்தியாவில் 1926 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சவூதி அரேபியாவில் அதற்கு முன்பிருந்தே நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது ஒரு தீவிர போக்கு கொண்ட சுன்னி இஸ்லாமிய அமைப்பு எனவும் தப்லிக் ஜமாத்துடன் தொடர்புடையவர்கள் முஸ்லீம் பகுதிகளுக்குச் சென்று, இஸ்லாமிய ஆண்கள் பதானி சல்வார் அணிய வேண்டும் எனவும், மீசையை மழித்து, தாடி வளர்க்க வேண்டும் என வலியுறுத்துவதாக சவுதி அரசு கூறியுள்ளது. மேலும் பெண்கள் புர்கா அணிய வேண்டும் எனவும் இந்த அமைப்பு வலியுறுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தப்லிக் ஜமாத் அமைப்பு முத்தலாக், ஹலாலா மற்றும் பலதார மணம் ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுவதோடு, இஸ்லாத்தில் இன்றியமையாமல் கடைபிடிக்க வேண்டிய அம்சம் எனவும் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு, மோடி அரசு முத்தலாக் சட்டத்தை இயற்றியபோது, தப்லிக் ஜமாத் அமைப்பினர் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து தப்லீக் ஜமாத் பல கோடி ரூபாய் நிதியுதவி பெற்று வருகிறது. இந்த அமைப்பு பெரும்பாலான நாடுகளில் அதன் பெரிய மையங்களை உருவாக்கியுள்ளது. இப்போது இந்த அமைப்பை சவுதி அரேபியா தடை செய்துள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தப்லிக் ஜமாத்தை தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *