• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மதுரையில் சிலை வைக்க விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை மேயருக்கு கோரிக்கை கடிதம்.

ByKalamegam Viswanathan

Dec 28, 2023

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்ததையொட்டி விருதுநகர் நாடாமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் மறைந்த விஜயகாந்த் அவர்கள் அருப்புக்கோட்டையில் பிறந்து, அம்பாசமுத்திரத்தில் கல்வி கற்று, மதுரையில் வாழ்ந்து, வளர்ந்து கலைத்துறை மற்றும் அரசியலிலும் தமிழகத்தில் சாதனை படைத்து பண்பாளராய், நெறியாளராய் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற விஜயகாந்த் அவர்களுக்கு மதுரையில் முழு உருவ சிலை வைக்க மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.