• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தேசிய பொதுக்குழு கூட்டத்தில் கோரிக்கை..,

ByS. SRIDHAR

Nov 9, 2025

இன்று புதுக்கோட்டையில் அகில இந்திய விஸ்வகர்மா பேரவை சார்பில் 38 வது தேசிய பொது குழு கூட்டம் இச்சங்கத்தின் தேசிய தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட விஸ்வகர்மா சங்கத்தினர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ VR.கார்த்திக் தொண்டைமான் இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மருதராஜா கணேஷ் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தேசிய பொருளாளர் சிவக்குமார் என அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

அப்போது இச்சங்கத்தின் தேசிய தலைவர் குமார் பத்திரிகையாளரிடம் பேட்டி அளிக்கையில்

உடனடியாக மாநில அரசும் மத்திய அரசும் பரிந்துரை செய்து விஸ்வகர்மாவினருக்கு மூன்று புள்ளி ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் வருகின்ற2026- சட்டமன்றத் தேர்தலில் விஸ்வகர்மா சமுதாயத்தை சார்ந்த வர்களுக்கு எந்த அரசியல் கட்சிகள் எம் எல் ஏ சீட் வழங்கி வாய்ப்பளிக்கிறதோ அந்த கட்சிக்கு தான் எங்களது ஒட்டுமொத்த சமுதாயத்தின் வாக்குகள் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்ன பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு இந்த கூட்டத்தின் வாயிலாக முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.