• Thu. Apr 25th, 2024

3 நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Byகாயத்ரி

Aug 20, 2022

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *