• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

பிரியா மரணம் : தலைமறைவான மருத்துவர்கள்..!

ByA.Tamilselvan

Nov 16, 2022

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு தொடர்பான வழக்கில் மருத்துவர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் அவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா (17). இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரியாவின் காலை அகற்ற வேண்டும் என கூறி அவரது காலை மருத்துவர்கள் அகற்றினர். இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம். எனவே மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
கவனக் குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் சோமசுந்தரம், பால்ராம் சங்கர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். மருத்துவர்களின் தற்போதைய இருப்பிடம் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.