• Sat. Apr 27th, 2024

பிரதமர் வருகை ..ட்ரோன்கள் பறக்க தடை

ByA.Tamilselvan

Jul 26, 2022

செஸ்ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை தரவுள்ளார். எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் ஜூலை.28 ம் தேதி உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்குகிறது. இந்த மாபெரும் விளையாட்டு விழாவை தொடக்கி வைக்க பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில்22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் , இடம் சென்னை விமான நிலையம் ,ஆளுநர் மாளிகை, ஆகிய இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் வான்வழி ,அளில்லா விமானங்கள் ,ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *