தலைநகர் டெல்லியின் காசிப்பூர் மார்க்கெட் பகுதியில், மர்ம பை ஒன்றில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ”’
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தலைநகர் டெல்லியின் காசிப்பூர் மார்க்கெட்டில், மர்ம பை ஒன்றில் வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்தை சுற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் பாதுகாப்பான இடத்தில வெடிக்க செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.