சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, துணைவேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ள நிலையில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.