மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மாணிக்க விநாயகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. பக்திப் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
மயிலாடுதுறை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகனாவார்.
கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான ‘தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பருத்தி வீரன், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
மாணிக்க விநாயகம் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபல திரைப்பட பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். தலைவர் கலைஞர் மீதும், என் மீதும் அளவற்ற அன்பை பொழிந்து, பெயரை போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் திருவான்மியூரில் வைக்கப்பட்டிருக்கும் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார். மாணிக்க விநாயகம் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை,கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை,எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து,வெளியே […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 411செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் […]
- இன்று முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் நினைவு நாள்விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) நினைவு நாள் […]
- மகளிர் காவல்துறை பொன்விழா நெல்லை வந்த சைக்கிள் பேரணிக்கு உற்சாக வரவேற்புதமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை […]
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு..!தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான […]
- பங்குனி உத்திர பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு..!பங்குனி உத்திர பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.ஜெயராமன் நம்பூதிரி தலைமையில் […]
- மதுரையில் முதலமைச்சரின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த புகைப்படகண்காட்சிதமிழ்நாடு முதலமைச்சர் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த பிரமாண்டமான புகைப்படக் கண்காட்சியினை, பள்ளி கல்வித்துறை […]
- நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்..!தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயமான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று […]
- ஏப்ரல் மாதம் முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைமதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர சேவை துவங்கபடுகிறது.மதுரை விமான […]
- இன்னோசன்ட் காலமானார்இந்திய சினிமாவில்ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்த பிரபல மலையாளகுணசித்திர நடிகர் இன்னோசன்ட்(75) நேற்று மாலை திருவனந்தபுரத்தில்(27.03.2023) […]
- ஜெயலலிதாவை முன் வைத்து சசிகலா நடத்திய அரசியலை சொல்லும் ‘செங்களம்’எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள புதிய இணையத் தொடர் ‘செங்களம்’.இந்த இணையத் தொடரில் […]
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]