மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தில் உள்ள 108 சன்னதிகள் கொண்ட முக்தி நிலையத்தில் , அமாவாசை தினத்தில் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி - க்கு மிளகாய் யாகம் நடைபெற்றது.
இந்த யாக பூஜை, பில்லி, சூனியம், பித்ரு தோஷம், முன்னோர்களுக்காக விடுபட்ட தர்ப்பணங்கள் உள்ளிட்டவை செய்யாத பக்தர்கள், இந்த மிளகாய் யாகத்தில் பங்கு கொண்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், ஏராளமான பக்தர்கள் அமாவாசை தினமாகியநேற்று, ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம் செய்து வழிபட்டனர். இந்த பூஜைக்கு மதுரை, தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .