• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தோனியை உற்சாக முழக்கங்களுடன் வரவேற்ற மக்கள்…

BySeenu

Aug 4, 2025

கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்பொழுது கோவை விமான நிலையத்தில் இருந்த மக்கள் பலரும் தோனியை பார்த்தவுடன் மாஹி, தல தோனி, என்று உற்சாக முழக்கத்துடன் வரவேற்றனர்.

தொடர்ந்து அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு மக்கள் முந்தி அடித்துச் சென்றனர். ஆனால் காவல்துறையினர் தோனிக்கு பாதுகாப்பு வழங்கியதை அடுத்து காரில் புறப்பட்டுச் சென்றார்.