• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

ByP.Kavitha Kumar

Mar 10, 2025

நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்​கு​கிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இதில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். பின்னர், பிப்ரவரி 13-ம் தேதி வரை நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில், பல்வேறு மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நடந்து முடிந்த இரு அவைகளும், மார்ச் 10-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டன. இந்த சூழலில். பட்ஜெட் கூட்​டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (மார்ச் 10) தொடங்​கு​கிறது.

இந்த தொடரில் வக்பு வாரிய திருத்த மசோ​தாவை நிறைவேற்ற மத்​திய அரசு தீவிரம் காட்டி வரு​கிறது. இந்த மசோ​தாவுக்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் ஆரம்​பம் முதலே கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இந்த கூட்​டத் தொடரின்​போது, குடியேற்​றம் – வெளி​நாட்​டினர் சட்ட மசோ​தா, வங்கி திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோ​தா, கடலோர கப்​பல் போக்​கு​வரத்து மசோதா ஆகிய​வற்றை நிறைவேற்​ற​வும் மத்​திய அரசு தீவிர முயற்சி மேற்​கொள்​ளும் என்று தெரிகிறது.

இதற்​கிடையே, மும்​மொழி கொள்​கை, மக்​களவை தொகுதி மறு​வரையறை ஆகிய​வற்​றுக்கு தமிழக அரசும், பல்​வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இது நாடாளு​மன்ற கூட்டத் தொடரில் எதிரொலிக்​கும் என்று தெரி​கிறது. மணிப்​பூரில் மீண்​டும் கலவரம் ஏற்​பட்ட நிலை​யில், இதுகுறித்து நாடாளு​மன்​றத்​தில் காங்​கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.