மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுளம் ஊராட்சி கரட்டுப்பட்டியில் அரசுக்கு சொந்தமான கரடு புறம்போக்கு நிலத்தில் சுமாா் 44 ஏக்கா் பரப்பளவில் 25 ஏக்கா் சுத்தம் செய்த இடத்தில் மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியா் / திட்ட இயக்குநா் மோனிகா ராணா பனைமரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில்வாடிப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் .கதிரவன், ஒன்றிய உதவிப் பொறியாளா்கள் மருதம், மாலதி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பிச்சைமணி ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் கருப்பையா நாச்சிகுளம் ஊராட்சி மன்றத்தலைவா் .சுகுமாறன் மற்றும் ஊராட்சி செயலா் கதிரேசன் ஆகியோா் உடன் இருந்தனர்.