ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை சந்தித்து திரும்பியுள்ளார், ‘தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை’யின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான உ.தனியரசு.
அவரிடம் அரசியல் டுடே டாட்காம்காக ஓரிரு கேள்விகளை முன் வைத்தோம்.
கே: அரசியல் களத்தில் இதுநாள் வரை அமைதியாக இருந்த நீங்கள், இப்போது திடீரென்று ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து இருப்பது பற்றி..?
ப : ‘’ஓ.பி.எஸ். எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாதபடி தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குழப்பிக் கொண்டே இருக்கிறார்.
ஈரோடு தொகுதியில் பா.ஜ.க.வை நிறுத்தாமல் எடப்பாடிக்கு ஆதரவு கொடுத்து அவரை இரண்டாவது இடத்துக்கு கொண்டுவந்து ஆளாக்க சாதிப் பாசத்தால் துடியாய் துடிக்கிறார் அண்ணாமலை.
கே : ஓ.பி.எஸ். இருவருமே பா.ஜ.க.வின் ஆதரவை கேட்டவர்கள்தானே? யாருக்கு ஆதரவு என்கிற நிலைப்பாட்டை எடுக்கும் போது யாரையாவது ஒருவரைத்தானே ஆதரிக்க முடியும்?
ப : ‘’வாஸ்தவம்தான். எடப்பாடியும், அண்ணாமலையும் கொங்குவேளாளக் கவுண்டர் பேரவையில் அண்ணாமலை மாநில தலைவராகவும், இ.பி.எஸ். பொதுச்செயலாளராகவும் இருந்தவர்கள்தான். அப்படி இருக்கும் போது ஓபிஎஸ்.ஸை எப்படி ஆதரிப்பார்?அண்ணாமலை, வானதி, இ.பி.எஸ். எல்லோரும் ஓர் அணியில்தான் இருப்பார்கள்.
ஓ.பி.எஸ். தயக்கம் காட்டக் கூடாது. ஆட்டோவில் சுறுசுறுப்பாக ஏறி நின்று ஓட்டு கேட்டு வர்ற இளைஞர் யாரையாவது ஈரோடு கிழக்குத் தொகுதியில் நிறுத்தவேண்டியதுதான்’’.
கே: நீங்கள் தமிழ்நாடு கொங்குஇளைஞர் பேரவை என்றொரு தனி அமைப்பை நடத்தி வருகிறீர்கள். ஓபி.எஸ். – இ.பி.எஸ்.இரண்டு அணிகளாக இருப்பதால் உங்களுக்கு என்ன கவலை?
ப : ‘’அப்படியில்லை..அது அம்மா கட்சி. அம்மாவின் ஆதரவோடு நான் இரண்டு முறை கூட்டணிக் கட்சியாக இருந்து தொடர்ந்து பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்தவன். அந்த பாசத்தினால் வந்த அக்கறைதான். இரண்டு அணியும் ஒன்றாக இணைய வேண்டும் என்கிற ஆசைதான்.வலிமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.
அதனால்தான் பிரிந்துக் கிடக்கும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களான பன்ருட்டி ராமச்சந்திரன், அன்வர் ராஜா, கே.சி.பி. போன்ற இன்னும் சில தலைவர்களை ஒன்று சேர்த்து அழைத்து இணைத்து கொள்வதோடு, டி.டி.வி.தினகரன், சின்னம்மா, ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன் ஆகியோரை எல்லாம் ஓ.பி.எஸ். அணியின் தலைமையில் இ.பி.எஸ்.ஸை எதிர்த்து நின்றால் அந்த அணியை 3வது இடத்துக்கு தள்ளி, எடப்பாடியை அநாதை ஆக்கிவிடலாம். இதற்குதான் அண்ணாமலை தடையாக இருக்கிறார். இதனால் பா.ஜ.க.விலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை ஓ.பி.எஸ்.பிடிப்பார். பா.ஜ.க.தனியாக நிற்காது. இ.பி.எஸ்.க்கு ஆதரவு தந்து எடப்பாடிக்கு வழிவிடுவதற்காகதான் ’கூட்டணியில் பெரிய கட்சி எதுவோ அந்த கட்சிதான் தேர்தலில் நிற்க வேண்டும்” என்று அண்ணாமலை திரும்பத்திரும்ப சொல்லும் காரணம், இ.பி.எஸ்.அணிதான் பெரிய கட்சி என்று சொல்லாமல் சொல்கிறார். இரட்டை இலை இல்லாத இரண்டு அணியாக இருக்கும் கட்சியில் இ.பி.எஸ்.பெரிய கட்சி என்று அண்ணாமலை சொன்னால், அவர் பா.ஜ.க.வில் இருந்துக் கொண்டு அக் கட்சிக்கு துரோகம் செய்கிறார் என்றுதான் அர்த்தம்”.
- முக கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்றால் மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை, […]
- மஞ்சூர் பள்ளி மாணவி கட்டுரை போட்டியில் முதலிடம் மாவட்ட ஆட்சியர் பாராட்டுகட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மஞ்சூர் மாணவிக்கு கலெக்டர் பாராட்டுஉதகமண்டலம் NCMS அருகில் […]
- இன்று இந்தியர் ஒருவர் முதல்முதலாக விண்வெளிக்கு சென்ற நாள் -ராகேஷ் சர்மாராகேஷ் சர்மா சோயூஸ் வு-11 விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் […]
- ரோகினி திரையரங்கில் நடந்தது கண்டிக்கத்தக்க செயல்-துரை வைகோ பேட்டிராஜபாளையம் அருகே மதிமுக ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில் முறம்பில் செயல்படும் தனியார் முதியோர் […]
- திருவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் வந்திருந்து […]
- தஞ்சாவூரில் நிறுவுவதற்காக கன்னியாகுமரியில் தயாராகும் திருவள்ளூர் சிலைதஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையில் நிறுவுவதற்காக எட்டடி உயர திருவள்ளூர் சிலை மயிலாடியில் தயாராகி வருகிறது.3000 […]
- கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது .பள்ளியின் […]
- ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின் கோட்பாடுகள் சரியானது அல்ல -தமிழக ஆய்வாளர் பரபரப்பு தகவல்இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் தமிழ்நாட்டில் ஆராய்ச்சிக்கு அனுமதிக்காக காத்திருக்கும் நீலகிரி விஞ்ஞானி!ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று […]
- மதுரையில் காரில் இளைஞரை தரதரவென இழுத்து சென்று சாலையில் தூக்கி வீசிய கொடூர சம்பவம்இரு சக்கர வாகனத்தை மோதிய காரை வழிமறித்த இளைஞரை பிடித்து சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டு […]
- ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி, ஹாட்ஸ்டார் அடுத்த வலைத்தள தொடரை அறிவிப்புஇந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த வலைத்தள தொடரைஅறிவித்துள்ளது.இந்த வலைத்தள தொடரில் […]
- “கன்னி” படத்தில் மண்ணின் பெருமை, தொன்மை, பாரம்பரியம்யாரும் செல்லத் தயங்கும் இடங்களில், யாரும் படப்பிடிப்பு நடத்தத் திணறும் இடங்களில் தேடித் தேடி, படப்பிடிப்பு […]
- கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக […]
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]