• Fri. Apr 26th, 2024

வரும் 18-ம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறப்பு

ByA.Tamilselvan

Jul 13, 2022

கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 18-ம் தேதி திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021 – 2022-ம் கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் முடிந்தது. செமஸ்டர் தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது.இந்த நிலையில்,வரும் 18-ம் தேதி திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தலின் படி, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2021 – 2022-ம் கல்வியாண்டின் கோடை விடுமுறைக்கு பின், வருகிற 18-ம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்பட்டு, 2022 – 2023-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும்.
இதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களும் முறையாக மேற்கொள்ள வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *