சிவகங்கை மாவட்டம் எஸ் புதூர் ஒன்றியம் சார்பில் சமூக நல்லிணக்கை இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.எஸ் டி பி ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பில் சிவகங்கை மாவட்டம் எஸ் புதூர் ஒன்றியம் சார்பில் சமூக நல்லிணக்கை இப்தார் நிகழ்ச்சி ஒன்றிய தலைவர் அப்துல் ரஜாக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .. மதுரை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது தாஹா வாழ்த்துரை வழங்கினார் ..
மதுரை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜியாவுதீன் சிறப்புரையாற்றினார்….
திமுக அதிமுக கம்யூனிஸ்ட் மதிமுக கட்சியின் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் . மேலூர் தொகுதி தலைவர் சித்திக் மேலூர் தொகுதியின் அமைப்புச் செயலாளர் சதாம் மேலூர் ஒன்றியத்தின் செயலாளர் சையது இமாம் மற்றும் தொகுதி ஒன்றிய கிளை நிர்வாகிகள், ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .