• Thu. Mar 28th, 2024

ஓணம் பண்டிகை- தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு விடுமுறை

ByA.Tamilselvan

Sep 6, 2022

நாளை மறுநாள் ஓணம்பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
கேரள எல்லையை யொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். இதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதுபோல கோவை, நீலகிரி, கோவை, திருப்பூர், சென்னை மாவட்டங்களுக்கும் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக ஈரோ டு, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் ஓணப்பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 9 மாவட்டங்களுக்கு ஓணப்பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *