• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம்

Byஜெ.துரை

Jan 27, 2024

சென்னை எம்ஜிஆர் 137-வது வட்டம் தேமுதிக கட்சியின் சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு வட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயமணி தலைமையில் அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பகுதி செயலாளர் வே.லட்சுமணன் முன்னிலை வைத்தார்.

மேலும் வட்ட அவைத் தலைவர் செல்வம், பொருளாளர் B.சக்தி, மற்றும் துணை தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.