• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தனியார் நட்சத்திர விடுதியின் லிப்டில் சிக்கி கொண்ட வங்காளதேசத்து கால்பந்தாட்ட வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்புத் துறையினர்.

Byஜெ.துரை

Jan 28, 2024

கேலோ இந்தியா சென்னை விளையாட்டு போட்டிக்கு பங்கேற்க மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள் 10 பேர் சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள சிம்சன் நட்சத்திர விடுதியில் உள்ள மின் தூக்கியில் சிக்கி மாட்டிக் கொண்டனர்.

விடுதியின் ஊழியர்கள் கோயம்பேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்து விரைந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய குழுவின் நிலைய அலுவலர் போக்குவரத்து வி.ஸ்டீபன் குமார் அவரது தலைமையில் துரிதமாக செயல்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்டனர்.