• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அக்.17ல் எடப்பாடி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்..!

Byவிஷா

Oct 14, 2023

வரும் அக்டோபர் 17ஆம் தேதி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவை அதிமுக கழட்டிவிட்டது. இதன்பின் இரு தலைவர்களும் மவுனம் காத்து வந்ததால், மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம் என அதிமுக தெரிவித்தது.
அதுமட்டுமில்லாமல், அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து மக்கள் நலனுக்காக குரல் கொடுப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டணி முறிவை தொடர்ந்து அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்கான பணியில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர். மறுபக்கம், கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவர்கள் விருப்பம், இனி பாஜக – திமுக தான் என மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதுபோன்று, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில், வரும் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு, சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.