குழந்தைகளுக்காகவே ஆங்கிலத்தில் படங்கள் தயாரிப்பார்கள் இந்தியாவில் பிற மொழிகளில் குழந்தைகளுக்காக படங்கள் தயாரிக்கின்றார்கள் தெலுங்கில் தயாரித்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்தான் மைடியர் குட்டிச்சாத்தான் அது போன்ற முயற்சிகள் தமிழில் இன்று வரை இல்லை அந்த முயற்சியின் ஆரம்ப புள்ளிதான் ஓமை டாக் திரைப்படம் குழந்தையை கதாநாயகனாக்கி அவரை சுற்றிய திரைக்கதை என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதுதமிழ்த் சினிமாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ள படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ள முதல் தமிழ் படம் ஓ மை டாக்.

மூத்த நடிகர் விஜயகுமாருடைய மகன் அருண்விஜய், அவருடைய பேரன் அர்ணவ் விஜய் ஆகிய மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ளனர்.ஊட்டியில் வசிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பம் அருண்விஜய்யுடையது. அப்பா விஜயகுமார், மனைவி மகிமா நம்பியார், மகன் அர்ணவ் ஆகியோரைக் கொண்ட சிறிய குடும்பம்.தங்கள் வசதியை மீறி மகனை உலகத்தரப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைப்பதால் கடன் சிக்கல்.அதனால் சின்னச் சின்னச் சங்கடங்கள் எனப் போய்க்கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்துக்குள் ஒரு நாய்க்குட்டி நுழைகிறது. அதன்பின் நிறைய மாற்றங்கள். அவை என்ன? என்பதைச் சுவாரசியமாகச் சொல்லியிருக்கும் படம்தான் ஓ மை டாக்.விஜயகுமார் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்பதும் அருண்விஜய் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதும் புதிததல்ல. அவர்கள் குடும்பத்திலிருந்து நடிக்க வந்திருக்கும் சிறுவன் அர்ணவ், சிறப்பாக நடித்து அனைவரும் கவர்ந்திருக்கிறார்.

முதல்படம் போல் இல்லாமல் மிகவும் பழகியது போல் எல்லாக்காட்சிகளும் மிக இயல்பாக நடித்திருக்கிறார் அர்ணவ்.குடும்பத்தினரால் அடக்க முடியாத குறும்புகள், பள்ளியில் ஆசிரியர்கள் அறியாமல் செய்யும் சேட்டைகள், நாய்க்குட்டி வந்தவுடன் அதனுடன் ஏற்படும் அன்னியோன்யம், கடைசிக் காட்சியில் வில்லனையும் மனம் மாற வைக்கும் தூய அன்பு ஆகிய எல்லாவற்றிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார் அர்ணவ். திருஷ்டி சுத்திப் போடுங்க.நடுத்தரக் குடும்பத்தலைவர் வேடத்தில் அச்சுஅசலாகப் பொருந்தியிருக்கிறார் அருண்விஜய், அவருடைய முன்கதை அவருக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.
மகிமா நம்பியார் அழகு. சாந்தமான நடிப்பு. மகனை மாமனார் திட்டிவிட்டார் என்பதால் கொதிக்கும் இடம் சிறப்பு.
விஜயகுமாரின் அனுபவ நடிப்பு தலைமுறை இடைவெளியைச் சொல்லும் அவருடைய வேடத்துக்குப் பலம்.
சிம்பா எனும் நாய்க்குட்டி படம் நெடுக வருகிறது. நாமும் தூக்கிக் கொஞ்சலாம் என நினைக்குமளவுக்கு இருக்கிறது.

அர்ணவ்வின் நண்பர்களாக வரும் சிறுவர்களும் அவர்களுடைய துடிப்பான நடிப்பும் படத்துக்குப் பலம்.கோபிநாத்தின் ஒளிப்பதிவு இயற்கை அழகையும் கதையின் தன்மையையும் சரியாக பதிவு செய்திருக்கிறது நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை அளவு.இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
என்கிற திருக்குறள் சொல்லும் கருத்தை வலியுறுத்தும் மையக்கதையை வைத்துக் கொண்டு, பல பாடங்களை வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போலச் சொல்லியிருக்கிறார் புது இயக்குநர் சரோவ் சண்முகம். நாய்க்குட்டி, குதிரை ஆகியனவற்றை வைத்து சக உயிரினங்கள் மீது நாம் காட்ட வேண்டிய அன்பையும் அக்கறையையும் சுட்டியிருக்கிறார்.
குழந்தைகள் பெரியவர்கள் ஆகிய அனைவரும் கூடிக் கொண்டாடிப் பார்க்கக் கூடிய படம்.

- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]