• Sat. Apr 20th, 2024

சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவன் தற்கொலை

ByA.Tamilselvan

Sep 16, 2022

தேர்வில் தேர்ச்சி பெறாத வருத்ததில் சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் 4-ம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் இருந்த அவர், ஸ்கிப்பிங் கயிறு மூலம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஐஐடியில் ஒடிசா மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *