திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு கொடுக்கவில்லை,வெல்லம் கொடுக்கவில்லை எனவே இது பொய்த்தொகுப்பு என அண்ணாமலை பேட்டி.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களிடம் பேசும்போது.. தி.மு.க. தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக தெரிவித்தது. ஆனால் சொன்னதை ஏன் செய்யவில்லை? 2014-ம் ஆண்டு, 67 சதவீதம் பேர் சமையல் கியாஸ் பயன்படுத்தினர். தற்போது 99.3 சதவீதம் பேர் கியாஸ் பயன்படுத்துகின்றனர். முன்பு இருந்ததை விட இரண்டு மடங்காக தற்போது கியாஸ் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால் மத்திய அரசு போராடி, குறைந்த விலைக்கு கொடுத்து வருகிறது. மின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியிருப்பதாக தி.மு.க.வினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதற்கான ஒரு கடிதத்தை காட்டுங்கள்.
மின்வாரிய நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள், நஷ்டத்திற்கு காரணம் என்ன என்று வெளியிட்டால், மக்கள் தெரிந்து கொள்வார்கள். சோலார் மின் உற்பத்திக்கு ஒரு மெகாவாட்டுக்கு ரூ.20 லட்சம் கமிஷன் கேட்கின்றனர். இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு கொடுக்கவில்லை. பனை வெல்லத்தையும் கொடுக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றவர்கள், இன்று ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். இது பொங்கல் தொகுப்பு அல்ல, பொய்த் தொகுப்பு. அமைச்சர் ஏ.வ.வேலு, ஏன் சர்க்கரை கொடுக்கிறோம் என்றால் அப்போது தான் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாப்பிடுவார்கள் என கூறியுள்ளார். 2024-ல் மக்கள் தி.மு.க.விற்கு முடிவுரை எழுதுவார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]