தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு சென்றுள்ள அதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிப் பழனிச்சாமி பேசும் போது.., எங்களுக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அப்படி கருத்து வேறுபாடு இருந்தால் அவர் எப்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வார்?. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவும் அதிமுகவும் கூட்டணியில் உள்ளது. அது வரும் மக்களவைத் தேர்தலிலும் தொடரும். ஊடகங்களில் தேவையில்லாத விவதாங்களைத் தவிர்க்கத்தான் அண்ணாமலை குறித்த கேள்விகளை தவிர்க்கும் படி கூறினேன். மேலும் கூட்டணியில் இருந்தாலும், அனைவரும் அவர்களின் கட்சிகளை வளர்க்கத்தான் நினைப்பார்கள். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் 10 ஆண்டு காலமாக அவர்களுடன் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் இப்போது தான் அத்தி பூத்தது போல, “ 12 மணி நேர வேலை சட்டத்திருத்தத்தினை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளனர்”.
தமிழ்நாடு நிதியமைச்சர் தொடர்பாக வெளியான ஆடியோ அதிர்ச்சி அளிக்கிறது. அந்த ஆடியோ குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த ஆடியோ அமைச்சரவையில் உள்ள தியாகராஜன் பேசியுள்ளார். ஆனால் இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து வாய் திறக்கவில்லை. மேலும், அந்த ஆடியோவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 30ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதனை நாங்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என கூறினார்.
மேலும், “ கொடநாடு விவகாரம் நடைபெற்றது அதிமுக ஆட்சிக் காலத்தில் தான். நடவடிக்கை எடுக்கப்பட்டது அதிமுக ஆட்சிக் காலத்தில் தான். குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக ஆட்சிக்காலத்தில் தான். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வழக்கு நடத்தியது அதிமுக. கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் நடைபெறவில்லை. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என முதலமைச்சர் கூறிதற்கு சட்டமன்றத்தில் நேருக்கு நேர் நான் பதில் அளித்தேன்”.
ஒரு சிலரைத் தவிர யாரை வேண்டுமானாலும் அதிமுகவில் இணைப்போம். ஓ. பன்னீர் செல்வம் மாநாடு நடத்துகிறார் என்றால் அது குறித்து நான் எப்படி கருத்து கூற முடியும். அது குறித்து ஓ. பன்னீர் செல்வத்திடம் தான் கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அந்த பேட்டியில் கூறினார்.
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]