கோவில்களில் சாமி சிலையை தொடுவது ஆகமத்துக்கு எதிரானது என அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிராக புதிய வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து சாதியினர் அர்ச்சகர்களாகலாம் என்கிற நிலைமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாதி ஆதிக்கத்துக்கு எதிராக தந்தை பெரியார் முன்வைத்த கோரிக்கை அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது. தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, இக்கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார். ஆனால் நீதிமன்ற வழக்குகளால் இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மிகப் பெரும் சட்ட போராட்டங்களுக்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அண்மையில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்து பணி ஆணை வழங்கியது.
ஆனாலும் சாதி ஆதிக்கவாதிகள், மத பழமைவாதிகள் இதனை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். தற்போது இந்துக்களில் ஒரு பிரிவினர்தான் சாமி சிலைகளைத் தொட்டு வழிபாடு நடத்த முடியும் என்பது ஆகமம். ஆகவே அர்ச்சகராகிவிட்ட அனைத்து சாதியினருமே சாமி சிலைகளைத் தொட்டு பூஜை செய்ய முடியாது என்கிற வாதத்தை அவர்கள் முன்வைக்கின்றனர். தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த ஆபத்தை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அனைத்து சாதியினர் அர்ச்சகராவதற்கு எதிராக தொடரப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் விவரங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். மொத்தம் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆகையால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதீன மடங்களும் இந்த வழக்குகளில் தங்களையும் இணைத்துக் கொண்டு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது அவரது வேண்டுகோள்.அத்துடன் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மூத்த வழக்கறிஞர்களை கொண்டு ஒருதரப்பினர் அரசியல் சாசனத்துக்கும் மேலானவர்கள் என்கிற அடிப்படைவாதத்தை தகர்த்து சமூக நீதி கோட்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றும் ரங்கநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]