• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

குற்றங்களை தடுக்க புதிய முயற்சி..,

பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு காவல் உதவி எண்கள் QR குறியீடு வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள்.

SCAN CONNECT RESOLVE

ஆட்டோ மற்றும் பொதுத்துறை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை மற்றும் அனைத்து துறை எண்கள், கம்ப்ளைன்ட் போர்டல் அடங்கிய QR குறியீட்டை இன்று 04-10-25 தொடங்கி வைத்தார்கள்.

உதவி எண்கள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் whatsapp எண் அனைத்து காவல் நிலையங்களின் தொலைபேசி எண்கள், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு தொலைபேசி எண் தீயணைப்புத் துறை குழந்தை பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு
நெடுஞ்சாலைத்துறை ஆம்புலன்ஸ் உதவி மற்றும் அனைத்து துறை உதவி எண்கள்

புகார்கள் பதிவு செய்ய
Tamilnadu Police Citizen portal
சைபர் குற்றங்கள் பதிவு செய்வது,
செல்போன் மிஸ்ஸிங்(CEIR portal)

சமூக வலைதள பக்கங்கள்கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின்
Facebook Instagram Twitter ஆகிய சமூக வலைத்தள பக்கங்கள்

ஆகியவற்றை இந்த QR கோடு பயன்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு மதியழகன், நாகர்கோவில் போக்குவரத்து ஆய்வாளர் திரு வில்லியம் பெஞ்சமின், உதவிய ஆய்வாளர் திரு ஸ்மித் ஆல்ட்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.