• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சபாநாயகர்,கவர்னர்,நிதியரசருடன் திருநெல்வேலி புதிய டிஆர்ஒ ஜெயஸ்ரீ அழகுராஜா சந்திப்பு

ByA.Tamilselvan

Jun 19, 2022

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய மாவட்ட வருவாய் அலுவலரா பொறுப்பேற்ற ஜெயஸ்ரீ திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தலூகா, லெப்பை குடியிருப்பில் .சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவுவை பூங்கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்த கவனர் ஆர்.என்.ரவியை ஆட்சியர் வி .விஷ்ணு IAS வரவேற்றார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர்(DRO) ஜெயஸ்ரீ அழகுராஜா, தமிழக ஆளுநருக்கு Gandhi,The years that Change the World-1914 to 1948 எனும் புத்தகத்தினை பரிசளித்தார் . இந்நிகழ்வில் கலெக்டர் அலுவல ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அதே போல திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வி.விஷ்ணு, ஐஏ.ஸை ,மாவட்ட வருவாய் அலுவலர்ராக புதியதாக பதவியேற்று இருக்கும் .ஜெயஸ்ரீ அழகுராஜா , மாவட்ட ஆட்சிருக்கு பூங்கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார் .


மதுரை கிளை, சென்னை உயர் நீதிமன்றம் நீதியரசர். வி. சிவஞானம் குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு வருகை புரிந்தார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ அழகுராஜா மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்