• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாதந்தோறும் கரன்ட்பில்-அமைச்சர் முக்கிய தகவல்

ByA.Tamilselvan

Jul 17, 2022
Senthil balaji
  தமிழகத்தில் வீடுகளுக்கு ஸ்மார்ட்  மீட்டர் பொருத்தப்பட்டால் மாதந்தோறும் மின் கட்டண அளவீடு முறை அமல்படுத்தப்படும்
               மின்சாரத்துறை  அமைச்சர் செந்தில்பாலாஜி  நீலகிரி மாவட்டத்தில்  மழை சேதங்கள் குறித்து  ஆய்வு செய்தார்.பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய அவர்  அடுத்த 5 ஆண்டுகளில் தமிழத்தில் சொந்தமாக 6220 மெகாவாட்  மின்சாரம் உற்பத்தி  செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  11 நாட்கள் மின் உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பில்  உள்ளது. வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்  பொருத்தப்பட்டால் மாதந்தோறும் மின் அளவீடு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.