தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்ய அதிகம் வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு செய்து இருந்தது.
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது.
விடாமல் பெய்து வரும் மழையால் வாகன ஒட்டிகள் அவதி.தொடர் மழையின் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அணிஸ் சேகர் அறிவித்துள்ளார்.