மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் உள்வட்டம், கீரனூர் கிராமத்தை சேர்ந்த செல்வா மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் மேலபூவந்தி கிராமத்தை சேர்ந்த அக்னீஸ்வரன், (3-11-2023) அன்று மதுரை மாவட்டம் கீரனூர் கிராம மயானத்தில் இடி.மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு முதலமைச்சர், நிவாரண உதவி தொகைக்கான தலா 4 லட்சத்திற்கான காசோலையை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா உடன் உள்ளார்.