ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு யார் வந்தாலும் நான் சந்திப்பேன் என சசிகலா பதில் அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பிஎஸ், சசிகலாவை சந்திக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். இதுகுறித்து சசிகலாவிடன் கேள்வி எழுப்பட்ட நிலையில் “யார் சந்திக்க வந்தாலும் நான் சந்திப்பேன் ” என சசிகலா பதிலளித்துள்ளார். மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவுடன் பேசி வருகிறார்களா என்ற கேள்விக்கு கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் இபிஎஸ் தன்னிச்சையாக செயல்படுகிறாரா என்பதை இனிமேல்தான் பார்க்கப்போகிறீர்கள் என்றும் பதிலளித்தார்.