• Fri. Mar 31st, 2023

ஏப்ரல் 6 முதல் சட்டப்பேரவைக் கூட்டம் !

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 6ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

மார்ச் 30ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடி எந்தெந்த நாட்களில் எந்த துறை மீது விவாதம் என்று முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் எப்போதும் உண்டு என்று சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தார். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்ததெந்த தேதிகளில், எந்தெந்த மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என முடிவாகும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே சட்டமன்றத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து மானியக்கோரிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் தாக்கலின்போது பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார். அதேபோல் வேளாண்துறை சார்ந்த அறிவிப்பை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் வெளியிட்டார். இந்த நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. அப்போது மேலும் பல அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *