• Tue. Sep 26th, 2023

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம், தில்லியில் நடைபெற்று வருகின்றது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றும் வரும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டுள்ளனர்.

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோதலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு முதல்முறையாக அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மத்திய அரசு பல்வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளதால், இதுகுறித்து எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *