ஓபிஎஸ் க்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி கிராம பொதுமக்கள் திரளாக வந்திருந்து பொதுக்குழு உறுப்பினர் சேட்.பா .அருணாசலம் தலைமையில் வைகை அணை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பழனி ,கருத்த கண்ணன் . ராஜேந்திரன் வெள்ளைச்சாமி,ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.