உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோயில் பார்வதி யானை புத்துணர்வுக்கான நீச்சல் குளம் 23 லட்சத்து 50 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதை நிதி அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பார்வதி என்ற யானைக்கு கண்ணில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி கண் சிறப்பு பிரிவு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு தாய்லாந்து நாட்டில் உள்ள யானைகளின் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மேல்சிகிச்சை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் யானை புத்துணர்வு பெற குளியல் தொட்டி அமைக்கப்பட்டு இன்று நிதியமைச்சர் திறந்து வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.




அப்போது நான் அமைச்சராகுவதற்கு முன்பே நான் தனிப்பட்ட முறையில் இங்கே தொடர்ந்து வழிபாடு செய்து வருகிறேன். எப்போது எல்லாம் நான் இங்கு வருவேனோ அப்பல்லாம் யானையை பார்த்து செல்வேன்.
யானையை நல்ல வகையில் உறுதி செய்து பராமரிக்கலாம் என்று நோக்கத்துடன் 3, 4 ஆண்டுகளுக்கு முன்பு யாணைக்கு கண் பிரச்சனை வந்தபோது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது பல முயற்சிகள் எடுத்தேன்.
ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் அந்த துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் இதை எடுத்துக் கூறி ஆலோசனை செய்து இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்தோம். தாய்லாந்து நாட்டில் உள்ள யானைகளின் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
யானை கல் பகுதியில் நிற்தால் சில பிரச்சனைகள் வந்தது. கல்லில் நிற்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு மண்ணுல நிற்கிற மாதிரி ஏற்பாடு செய்துள்ளோம். தண்ணீர் தொட்டி அமைத்தால் புத்துணர்வு கிடைக்கும் என்று ஆலோசித்து அமைச்சரிடம் கோரிக்கை வைத்து கோயில் வளாகத்தில் 23லட்சத்து 50 ஆயிரத்தில் அமைத்துள்ளோம்.இந்த குளியல் தொட்டியில் யானை இறங்கி மகிழ்ச்சியுடன் விளையாடியதை காண முடிந்தது
கோவிலில் இறைவனை வழிபாடு செய்தாலும் பராமரிப்பு, பழமை மாறாமல பாதுகாப்புடன் வைத்திருப்பது முக்கியம். கோவிலை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது தான் சிறந்த மேலாண்மைக்கு அழகு. பல கோவில்களில் இது போன்ற பிரச்சனை இருக்கிறது என்றார்.என்னை பொறுத்தவரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பல தலைமுறைகளாக வழிபாடு செய்பவனாக, அமைச்சராக இந்த கடமையை செய்வதில் ஆர்வத்துடன் இருந்தேன். இந்த சூழ்நிலையில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.கட்டிப் போட்டே வைத்திருந்த யானை இந்த நீரை பார்த்து மகிழ்ச்சியுடன் விளையாடியாது.
புறாக்கள் மேலிருந்து கழிவுகளை போடும் போது பாக்டீரியாக்கள் மூலம் யானைக்கு ஏதாவது நோய் ஏற்படலாம் என்பதனால் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]