

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தை பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. அரிட்டாபட்டி கிராமம் என்பது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதார பகுதியாக செயல்படுகிறது 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளது. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 250 பறவையினங்கள் உள்ளன. இதில் லகர் இராசாளி, ஷாஹீன் இராசாளி, மற்றும் இராசாளிப் பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்றுண்ணிப் பறவையினங்கள் உள்ளன. எறும்பு திண்ணிகள், மலைப்பாம்பு மற்றும் அரிய வகை தேவாங்கு ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் உள்ளன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கிறது. அரிட்டாபட்டியை பல்லுயிர்ப் பாரம்பரியத் தலமாக அறிவிப்பதற்கான முடிவு கிராம ஊராட்சிகள் மற்றும் மாநில தொல்லியல் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் போன்ற பல துறைகளின் ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பு உள்ளூர் சமூகத்தின் பங்கேற்புடன் பல்லுயிர்ப் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும். இந்த அறிவிக்கை, இப்பகுதியின் வளமான உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தைப் பாதுகாக்கவும் இது உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- வரலாறு படைத்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!உத்தராகண்ட்: உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- இந்தியாவில் முதன் முறையாக கோவையில் “பிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” அதிநவீன தொழில்நுட்பம்…உலக அளவில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் சீனாவை விட இந்தியாவுக்கு அதிகம் வந்துகொண்டிப்பதாக ஜப்பானை… Read more: இந்தியாவில் முதன் முறையாக கோவையில் “பிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” அதிநவீன தொழில்நுட்பம்…
- இருசக்கர வாகனத்தில் கார் மோதி, கூலி தொழிலாளி உயிரிழப்பு…மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலபட்டி காளவாசல் அருகில் உசிலம்பட்டியிலிருந்து நக்கலப்பட்டி நோக்கி சென்ற இருசக்கர… Read more: இருசக்கர வாகனத்தில் கார் மோதி, கூலி தொழிலாளி உயிரிழப்பு…
- மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.., போலீசார் விசாரணை…மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது… Read more: மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.., போலீசார் விசாரணை…
- குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக… Read more: குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…
- பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள்.., ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஓலா நிறுவனர் ஆலோசனை…“சாமானிய மக்களும் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பாரத மொழிகளில்… Read more: பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள்.., ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஓலா நிறுவனர் ஆலோசனை…
- ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவைக்கு ரூ.269 கோடியில் ஒப்பந்தம்..!சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகள் கொண்ட 10 மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.269… Read more: ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவைக்கு ரூ.269 கோடியில் ஒப்பந்தம்..!
- குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு..!தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு… Read more: குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு..!
- குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு.., குற்றங்களில் மூவர் கைது…கோவை குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட கேரளாவில் பதுங்கி இருந்த மூவர்… Read more: குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு.., குற்றங்களில் மூவர் கைது…
- மதுரையில் எம்எல்ஏ நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாடலுக்கு நடுத்தெருவில் போதையில் உற்சாகமாக நடனமாடிய அதிமுக தொண்டர்..,மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கருவேலம்பட்டியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை போடுவதற்கும் மற்றும்… Read more: மதுரையில் எம்எல்ஏ நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாடலுக்கு நடுத்தெருவில் போதையில் உற்சாகமாக நடனமாடிய அதிமுக தொண்டர்..,
- அம்மாவை ஸ்டாலின் பாராட்டியது அரசியல் உள்நோக்கம் உள்ளது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…
- ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி…ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி 10 நாட்கள் இலவசமாக நடைபெற்றது.… Read more: ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி…
- மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு… மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு…சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளி பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள்… Read more: மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு… மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு…
- சர்பாசி சட்ட விவகாரம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…சர்பாசி சட்ட விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்தும் RBL வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் கோவை… Read more: சர்பாசி சட்ட விவகாரம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…
- புகைப்படக் கண்காட்சி:மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியும் சிடார் மையமும்… Read more: புகைப்படக் கண்காட்சி:
