• Thu. May 2nd, 2024

இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம். வீடு, வீடாக கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்போம். இறச்சகுளத்தில் விஜய் வசந்த் கோரிக்கை

கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டம் நாகர்கோவிலில் மற்றும் இறச்சகுளம் பகுதியில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் களம் என்பது சூடு பிடித்திருக்கிறது. வாக்கு சேகரிப்பு ஒரு புறம் இருக்க இந்தியா கூட்டணி கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் செயல்வீரர்கள் கூட்டம் தொகுதி வாரியாக நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் இன்று செயல் வீரர் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு நாகர்கோவில் மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். இதில் 500 மேற்பட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசியது.
வீடு வீடாக கை சின்னத்தை கொண்டு சேர்க்க வேண்டும். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்றும் நிச்சயமாக புதிய இந்தியா உருவாகும். தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். மேலும், காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளை செயல் வீரர்கள் கூட்டத்தில் எடுத்து கூறி மக்கள் மத்தியில் கொண்டு சேருங்கள் என்று சொல்லி ஒவ்வொரு வீட்டில் உள்ள
அனைவரையும் வாக்களிக்க வையுங்கள் என்று பேசினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எப்படி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இந்த தேர்தலில் பாஜக வை அகற்றி வெற்றியை பெற வேண்டும். உங்கள் வீட்டு பிள்ளையான என்னை வெற்றி பெற வையுங்கள் என விஜய் வசந்த் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *