• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தவெக சார்பில் தலைவர்கள் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை..,

ByT. Balasubramaniyam

Jan 11, 2026

அரியலூர் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் கவிதா ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பொ.சந்திரசேகர் (முன்னாள் மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் ) ஆகியோர், அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் சென்னையில் தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து, தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து தவெக அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில்,அரியலூர் நகர த .வெ.க செயலாளர் எம் எஸ் கே கார்த்திக் முன்னிலையில், த.வெ.க.வில் இணைந்த கவிதா ராஜேந்திரன், பொ . சந்திரசேகர் ஆகியோர் 500 க்கும் மேற்பட்ட த.வெ.க கட்சியினருடன் ஊர்வலமாக சென்று நகராட்சி பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா , செட்டியேரி கரை பூங்காவில் அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் பெரியார், அண்ணல் அம்பேத்கர், தேசப்பிதா காந்தி,கர்மவீரர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் த.வெ க மாவட்ட ,ஒன்றிய ,நகர, கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.