• Fri. Sep 29th, 2023

குறுமத்தூரில் நியாய விலை கடை, குமரி எம். பி விஜய்வசந்த் திறந்து வைத்தார்…


குறுமத்தூரில் Y-73 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கத்திற்கு உட்பட்ட குறுமத்தூர் நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் புதிய கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதன் பணிகள் நிறைவு பெற்று புதிய கட்டிடம் கட்டி  முடிக்கப்பட்டு அதனை  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 
குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், களியக்காவிளை பேரூராட்சி மன்ற தலைவருமான சுரேஷ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் ஸ்டான்லி, ஜோஸ்வா, சுரேஷ்குமார், வசந்தா, விபின் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். 
நிகழ்ச்சியில் களியக்காவிளை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் பென்னட், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சலீம், செயலாளர் சுரேஷ்குமார், மாநில பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாஸ்டர் கிறிஸ்துதாஸ், ஜெகதீசன், குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவாகர், மாநிலச் செயலாளர் அமீர், காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வன்சிங், றிக்கிள், மனோகரன், சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளர் சேவியர்ஜாண், களியக்காவிளை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சுசிலா, குணசீலன், விஜிலா, தாஸ் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், பேரூராட்சி மன்ற பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed