தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற குமரியை சேர்ந்த இளம்பெண் பிரதமர்
மோடியிடம் இருந்து சான்றிதழ் பெற்றார்.
கன்னியாகுமரி மாணவி குல்ஃபியா தேசிய அளவில் முதலிடம் – ஆல் இந்தியா டாப்பர் ரேங்க். கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயத்தைச் சேர்ந்த அப்துல் காதர் – செய்ய தலி தம்பதியினரின் மகளும், மஹ்பூப் ஹுஸைன் அவர்களின் மனைவியுமான குல்ஃபியா அவர்கள்,
- நாகர்கோவில் SMRV கல்லூரியில் கம்பியூட்டர் புரோகிராமர் அஸிஸ்டண்ட் படித்து வருகிறார்.
- நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் கலந்து கொண்ட அவர், அனைவரையும் முந்தி முதல் இடம் (All India Topper Rank) பெற்றவர்.
- பிரதமர் மோடியிடம் இருந்து சான்றிதழ் பெற்றார்.
- குல்ஃபியாவின் இந்த சாதனை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.