• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கேரளா மாட்டு வியாபாரிகள் கொண்டு வந்தரூ. 2.80 லட்சம் பறிமுதல்..,

வேடசந்தூர் அருகே கேரளா மாட்டு வியாபாரிகள் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.2. 80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடபதுரை அருகே உள்ள தங்கம்மாபட்டி சோதனை சாவடியில் திண்டுக்கல் – திருச்சி நான்கு வழி சாலையில் வேடசந்தூர் பறக்கும் படை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்த போது
கேரள மாநிலம் எர்ணாகுளம் சேராநல்லூரரை மாட்டு வியாபாரிகள் 3 பேர் உரிய ஆவணம் இன்றி ரூ 2.82 லட்சம் பறிமுதல் செய்து வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.