வேடசந்தூர் அருகே கேரளா மாட்டு வியாபாரிகள் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.2. 80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடபதுரை அருகே உள்ள தங்கம்மாபட்டி சோதனை சாவடியில் திண்டுக்கல் – திருச்சி நான்கு வழி சாலையில் வேடசந்தூர் பறக்கும் படை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்த போது
கேரள மாநிலம் எர்ணாகுளம் சேராநல்லூரரை மாட்டு வியாபாரிகள் 3 பேர் உரிய ஆவணம் இன்றி ரூ 2.82 லட்சம் பறிமுதல் செய்து வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.



