• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

Byவிஷா

Nov 21, 2024

தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 57,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 57 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு, ஒரு கிராம் 7,145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 7,650 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 61,200 ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 101 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 1,01,000 ரூபாயாகவும் இருக்கிறது.
மேலும் கடந்த 18-ம் தேதி முதல் 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1,680 வரை உயர்ந்துள்ளது. இது நகைப்பெரியர்கள் மத்தியில் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.