சட்டமன்ற எதிர் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரும், அ. இ .அ. தி. மு. க. வின் பொதுச் செயலாளருமான மாண்புமிகு. எடப்பாடி K .பழனிசாமி அவர்களை சேலத்தில் அகில இந்திய மருது பாண்டியர் பேரவை நிறுவனர் தலைவர் சு .கண்ணன் சந்தித்து, அவருக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தார். தொடர்ந்து மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222 ம் ஆண்டு வீர வணக்க நாள் விழா மற்றும் வரும் அக்டோபர் 30 ம் தேதி பசும்பொன் உ .முத்து இராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி விழாவிற்கு அழைப்பிதழ் கொடுத்தார். அவருடன் மாநில அமைப்பு செயலாளர் பொன்னு பாண்டியன் , மதுரை மாவட்டத் தலைவர் குருசாமி , தென்காசி மாவட்டத் தலைவர் கருப்பசாமி , விளாச்சேரி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.