நொய்டாவில் நடைபெற்ற 9 வது சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் 3 முக்கிய பிரிவுகளில் விருதுகளை தட்டிசென்றுள்ளது.
சூர்யா நடித்து ஓடிடி.,யில் வெளியான இரண்டாவது படம் ஜெய்பீம். கடும் விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், பாராட்டுக்கள் என பலவற்றை சந்தித்த ஜெய்பீம் படத்தில் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞராக நடித்திருந்தார். பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள ஜெய்பீம் படம், சமீபத்தில் ஆஸ்கார் பரிந்துரை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் Minibox office international film festival நொய்டாவில் நேற்று நடைபெற்றது. 22 பிரிவுகளின் கீழ் இந்த விழா நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச அளவிலான படங்கள் இடம்பெற்றன. இதில் ஜெய்பீம் படம் 3 விருதுகளை பெற்றுள்ளது.
சிறந்த படம் ஜெய்பீம்
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய மூன்று பிரிவுகளில் ஜெய்பீம் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படமாக ஜெய்பீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருது சூர்யாவிற்கும், சிறந்த நடிகைக்கான விருது லிஜோமோல் ஜோசிக்கும் கிடைத்துள்ளது. ஜெய்பீம் படம் ஆஸ்கார் விருதை தொடர்ந்து கோல்டன் குளோப்ஸ் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கவனத்தை ஈர்த்த படம்
சர்வதேச திரைப்படங்களுக்கான IMDb ரேட்டிங் பட்டியலிலும் ஜெய்பீம் படம் முதலிடத்தை பிடித்துள்ளது. கர்ப்பிணி பெண், போலீஸ் காவலின் இருந்த தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி வழக்கறிஞரிடம் உதவி கேட்கிறார். பல்வேறு எதிர்ப்புக்கள், போராட்டங்கள், தடைகளை தாண்டி அப்பெண்ணிற்கு நியாயம் கிடைக்க செய்கிறார். இது தான் படத்தின் கதை. இந்த கதை உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
90 நாடுகள் பங்கேற்பு
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 90 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இயக்குனர்களின் படங்கள் இடம்பெற்றன. ஆரம்பத்தில் குறும்படங்கள், தனிப்படங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த விருதுகள், தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த படங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]