• Sat. Apr 27th, 2024

சூர்யா படத்துக்கு அதிகரிக்கும் டிமாண்ட்!

எதற்கும் துணிந்தவன் படத்தின் இந்தி ரீமேக்கின் உரிமைக்காக பல போட்டிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, மார்ச் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது!

இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது எதற்கும் துணிந்தவன் படத்துக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வட இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் டிமாண்ட் உள்ளது. இதனால் அதிகளவில் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் படத்தின் உரிமையை போட்டி போட்டு வாங்க முன்வருவதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *